அட்ரினல் பரவலாக பேசப்படும் வார்த்தை. அதைபற்றி டெக்னிக்கல் அஸ்பெக்ட்ஸ் உங்களை போலவே எனக்கும் தெரியாது. ஆனால் அது எதற்காக பேசப்படுகிறது என்ற அதன் உள்ளார்ந்த கருத்து அனைவருக்கும் தெரியும்.
அட்ரினல்ன்றது நம்ம உடம்புக்குள்ளயே இருக்குற ஒரு டாஸ்மாக்.
அதை தூண்டுனா ஒரு கிளர்ச்சி வரும். நமது மூளை அதை அவ்வப்போது தூண்ட ஆர்வத்தைக் காட்டும்.
சரி அந்த டாஸ்மாக் எத்தன மணிக்கு திறக்கும். அதுக்கு டைம்லாம் இல்ல.
சராசரியாக அனைத்திலும் நமக்கு ஒரு லிமிட்டேசன் இருக்கும். அது ஆனந்தமோ. துக்கமோ ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லையை கடந்து சூழல் அமையும் போது அந்த சூழலில் இருந்து உங்களை வெளியேற்ற உங்களை உள்ளிருந்து ஒரு விசை தூண்டும்.
நீங்கள் அதிலிருந்து வெளியே வந்து விடுவது ஒரு செயல். ஆனால் அந்த செயலின் போது உங்களின் உடல் அடைந்த ஒரு வித கிளர்ச்சி உங்களின் மூளையை போதையாக்கி புத்துணர்ச்சி அடைய செய்வதால்.
இப்போது உங்கள் மூளை அந்த போதைக்கு ஏங்க துவங்கும். அதற்காக நீங்கள் எல்லையை கடக்க வேண்டிய ஆசையை உருவாக்கும்.
இதுனு இல்லை எல்லா செயல்களிலும் உள்ள எல்லையை கடக்கும் போதும் இது நிகழும். பயம். ஆனந்தம். காமம். கோபம். வஞ்சகம். ஏமாற்றுதல். என எதுவானாலும்.
இப்போது நீங்கள் இரண்டு விசயத்தில் சிக்கி கொள்கிறீர்.
அதாவது எல்லையை கடக்க வேண்டும். எதற்காகவெனில் நமக்கு போதை வேண்டும். அதே நேரத்தில் எல்லையை கடக்க விடாமல் தற்காப்பு உணர்ச்சி உங்களை பாதுகாத்து அந்த எல்லையை கடக்க விடாமல் பயத்தையும் உண்டு பன்னும்.
ஆக நாம் அந்த கிளர்ச்சி போதையை அனுபவிக்கும் எல்லையை தாண்டி நமது பய உணர்வை தள்ளி செல்ல வேண்டும். என்ன செய்வது. வடிவமைக்கலாம்.
அம்யூஸ்மெண்ட் பார்க் போல. பாம்பாட்டி போல. கயிறு மேல் நடந்து வித்தை செய்வது போல. மலையேற்றம் போல.
நினைவுள்ளதான்னு தெரியல குழந்தைகளை தூக்கி போட்டு பிடிக்கும் போது பயந்து விட்டு பிறகு சிரிக்கும். யானையின் மேலே சவாரி வரும் பொது அழுது கொண்டே சிரிக்கும். இது போல நெரய உள்ளது. சரி இந்த பதிவு எதற்காக.
வாங்க பேசலாம்.
உங்கள் இது போன்ற கிளர்ச்சி பரவசம் செயல்களால் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் சிந்தனையை ஒரு எல்லையை கடக்க வைப்பதன் மூலம் இதை அடையளாம்.
ஒருவரிடம் அவரது தொழில் முற்றிலும் அழிந்து விட போகிறது என கூறினால் சடாரென அச்சம் ஒரு எல்லையை கடக்கும் அப்போது ஒருவித கிளர்ச்சி உள்ளிருந்து உந்தம் அளிக்கும். அந்த அச்சத்தில் இருந்து நீங்கள் மீள்வதற்கு ஒரு நிமிடம் ஆகலாம். ஆனால் இப்போது உங்களுக்கு ஒரு புதியதொரு சிக்கல் வந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கிளர்ச்சியை உங்கள் மூளை அனுபவித்து விட்டது. இனி அதை மீண்டும் கேட்கும். நீங்கள் அந்த வார்த்தையை மீண்டும் கேட்க வேண்டும். ஆனால் உங்கள் மனமோ அந்த வார்த்தையை அதாவது உங்கள் தொழில் அழிந்து விடும் என்ற வார்த்தையை நம்பகமான ஒருவர் சொல்ல வேண்டும். உங்கள் நண்பர் கூறினால் உங்கள் மனம் அதை ஏற்காது. அதை ஒரு ஜோதிடர் சொன்னால்.
உங்களுக்கு வாழ்க்கை பற்றி அச்சம் அதிகமாகும் மீண்டும் கிளர்ச்சி கிடைக்கும். இப்போது நீங்கள் மீண்டும் அந்த ஜோதிடரை நாடுவீர்கள். அவர் இன்னும் ஒரு எதிர் மறை பலனை கூறவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள். அது போல ஜோதிடரை தேட ஆரம்பித்திருப்பீர்.
உங்களுக்கு வாழ்க்கை எப்படி நடக்க போகிறது என தெரியாது அதனால் சோதிடரை நாடுவீர்கள். அவர் சொன்னது உங்களுக்கு த்ருப்தி இல்லாவிட்டால் அவர் சரியில்லை என முடிவு செய்து விடுவீர்கள். யோசித்து பார்க்க முடிகிறதா. தெரியாத எதிர் காலத்தில் நடப்பனவற்றை அறிய போன இடத்தில் உங்கள் மனம் அதுவாக ஒரு தளத்தை அமைக்கிறது. அது இப்போயது தெரியாத வாழ்க்கையில் இருந்து விரும்பிய வாழ்க்கையை கூற வேண்டும் என முடிவு செய்கிறது. அதிலும் உங்கள் உள்ளூர கிளர்ச்சி பரவசத்தை தூண்டும் வார்த்தைகளை அது தேட துவங்குகிறது.
குரு சனி உண்ணதமானது எனக்கூறினால் உங்களுக்கு திருப்தி கிடைக்காது. ஆனாலும் உங்களுக்கு சோதிடமும் தெரியாது குரு சனி என்ன செயலாற்றும் எனவும். நடைமுறையில் அந்த இணைவால் பலர் அடைந்த வெற்றியும் தெரியாது. இருந்தாலும் அதை பிரம்மஹத்தி தோசம் என சொன்னவுடன் உங்களுக்கு கிளர்ச்சி துவங்கி விடும். இப்போது உங்களுக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ பரவசத்தை தேடும் உங்கள் மூளைக்கு கிளர்ச்சி கிடைத்து விட்டது. இதனாலேயே உங்கள் ஜாதகத்தில் எதாவது தோசம். சாபம். பாவம். கர்மா குறைபாடு என கூறுவதை உங்களை அறியாமலேயே நீங்கள் மயக்கமடைகிறீர்கள்.
சரி கிளர்ச்சி கிடைக்கிறது சரிதான். நல்லதுதானே.
ஆனால் உங்கள் மனம் வார்த்தைகள் அளித்த கிளர்ச்சியை செயல் வடிவம் வழங்கி அதிலுள்ள கிளர்ச்சியை அடைய நகர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு தெரியாமலேயே அதை செய்து ஒரு நாள் உண்மையாக மாற்றி அதில் பரவசமடையும்.
பாம்பு என்றால் உங்களுக்கு பயம். ஆனால் பாம்பு என யாராவது கத்தினால் அந்த பாம்பை நீங்கள் பார்த்துவிட ஆர்வம் கொள்வதற்கு காரணம் இதுதான். எதாவது விபத்து நடந்திருந்தால் அங்கு சென்று எட்டிப் பார்த்து விட்டு யாராவது இறந்துள்ளார்களா என ஆவல் கொள்வது இதுதான்.
ஒருவர் செய்திதாளில் ஒரு வீட்டில் நடத்த திருட்டு அல்லது ஒரு பெண்ணின் நடத்தை குறித்த செய்தியை படிக்கிறார். அவர் அந்த செய்தியை தன்னுடைய வாழ்வுடன் ஒப்பிட்டு ஒரு வித கலக்க உணர்வை மூளைக்கு செலுத்துகிறார் உடனே மூளை கிளர்ச்சி அடையும். இனி அவர் எப்போது செய்தி தாளை திறந்தாலும் அப்படி பட்ட செய்தியை கண்கள் அவரையே அறியாமல் தேடி அச்சமூட்டி கிளர்ச்சி கொள்ளும்.
இது ஒரு வகை சைக்கோதனம்தான் அளவைகடக்கும் போது.
எனவே நீங்கள் எங்காவது தோசம் .சாபம். பாவம் கர்மா. குர்மா. என விசயங்கள் மீது ஆர்வம் வைத்து அதை தொடர்ந்து படிக்க உங்கள் மூளை உள்ளிருந்து தூண்டினால் உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை செய்து கொள்ளுங்கள். அது உண்மையாகவே நடந்து விட நீங்கள் பாதையை ஏற்படுத்தி கொண்டு உள்ளீர்கள். நீங்கள் சைக்கோவின் மிக நெருங்கிய நிலையை நெருங்கி கொண்டு உள்ளீர

்கள் என.
உங்களை சுற்றி நீங்கள் நம்பி கொண்டுள்ளவற்றில் பெரும்பாலானவை இவைதான்.
அட்ரீனல் சுரப்பி பற்றிய சுவாரஸ்யமான பதிவு அருமை மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட் நன்றி..
LikeLike