
#ராகு #கேது எப்போது வந்தது?
நமது நண்பர் மற்றும் மதிப்பிற்குரிய Jothida Sri Chandra Guptha அவர்கள் ஒரு பதிவின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராகு கேது இந்திய சோதிடத்தில் எப்போது நுழைந்தது என்று.
ஆனால் இது போன்ற கேள்வி மற்றும் அதற்கான பதில்களை நான் முகநூலில் பார்த்துள்ளேன்.
சரி அது எப்போது நுழைந்தது.
குழந்தைக்கு கண் எப்போது திறந்தது என்று கேட்கலாம். கண் எப்போது முளைத்தது என்ற கேள்வி அவ்வளவு சரியானதாக இருக்காது. மேலும் கண் திறந்தது என்பது கூட திறந்திருந்த கண்தான் எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்பதுதான் கண் திறந்தது.
சரி வரலாற்று ரீதியான தர்க்க விவாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாத அளவிற்கு சிக்கிக் கொள்ளும் ஏனெனில் வரலாறு என்பதே அவனபடுத்தபட்ட சான்றுகளின் அடிப்படையில் உணரபடுவதே. ஆனால் பல விசயங்களை வரலாற்றுபடி ஆராய முடியாது.
ஆண்டம் எப்படி வெடித்திருக்கும் என கூகுளில் ஒரிஜினல் வீடியோ சர்ச் பண்ணுவது போல ராகு கேது எப்போது நுழைந்தது எனத் தேடுவது.
ஆனால் அண்ட பெரு வெடிப்பு பற்றி ஆய்வுகள் நடக்காமல் இல்லை. ஆனால் அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள். அதிக பட்சமாக 4000 ஆண்டுகளுக்குள் நடந்தவைகளே வரலாற்று பதிவுகளாக ஏற்றுக் கொள்ள படும். ஆனால் அது நடந்து பல் கோடி ஆண்டுகள் கடந்து விட்டதே.
பிறகு எவ்வாறு ஆய்வது.
மிச்ங்களை வைத்து ஆராயலாம். அதாவது தற்போது உள்ள இயக்கத்தை வைத்து முன்பு நடந்ததை ஊகிக்கலாம். அமைப்பு இயக்கம் உருவம்அதன் ஒன்று பட்ட நடவடிக்கை மாற்றங்கள். அதன் அடிப்படையில் தக்கவைத்துள்ள அமைப்பு என ஆராயலாம்.
சரி இந்திய சோதிடத்தில் ராகு கேது எப்போது வந்தது.
சிலர் சிலருடைய நூல்களை. காலங்களை குறிபிட்டு சில காலங்களை ஆதாரங்களை போல நினைத்து முன் வைக்கவும் செய்யலாம். நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நம்மிடம் உள்ள சோதிட நூல்கள் இறுதியானவையோ முழுமையானதோ இல்லை. பல அழிவுகளை கடந்து நம்மிடம் கிடைத்த நூல்கள் சொச்சம் மட்டுமே. சுருங்க சொன்னால்.
உண்மையான சோதிடத்தின் நூல் இருந்திருக்கும் என்றால் நமது கைகளில் தற்போது உள்ளது அந்த நூலில் முன் மற்றும் பின் அட்டைகள் மட்டுமே.
நாம் இப்போதும் கூட தலைப்பில் இருந்து விலகி செல்கிறோம்.
பிறகு எவ்வாறு ஆராய்வது ?
அதன் அடிப்படை கட்டமைப்பு பற்றி புரிந்து கொள்வதன் மூலம் அறியலாம்.
உலகம் முழுவதிலும் சோதிடம் செழித்து அடர்ந்து பழத்து குழுங்கினாலும் இந்திய சோதிடம் தனக்கான ஒரு தனித்துவத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே வைத்துக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதிலும் ராசி மண்டலங்களின் வழியாக சோதிடத்தை அனுகினாலும். நம்மைபோலவே அவர்கள் செய்தாலும்.
நாம் சில மாற்றங்களை கொண்டுள்ளோம் lunar Manson என்று அழைக்கப்படும் உக்தியை நாம் கையாள்கிறோம். பெயரே பாதி விசயத்தை கூறிவிடும். இது என்ன lunar Manson சந்திர விடுதி என தமிழ் படத்தினால் அதுவும் கூட சரிதான். சந்திரன் தங்கும் விடுதி என அவர்கள் குறிபிட்டது நட்சத்திரங்களை .
Tropical zodiac signs மற்றும் sidereal zodiac signs என்ற இரு வேறு பார்வைகள் உள்ளன இதை பேச துவங்கினால் நீண்டு கொண்டே போகும்.
சருக்கமாக பருவமண்டல ராசி கூட்டங்கள். மற்றும் நட்சத்திர மண்டல ராசி கூட்டங்கள் என்று கூறலாம்.
இதில் வேறு நாடுகளில் பருவ மண்டல ராசிகள் பயன்பாட்டில் உள்ளது அதாவது மேசம் துவங்கி மீனம் வரை இது இதன் பெயருக் கொப்பவே பருவங்களை சார்ந்து பிரிக்கபட்ட ஒன்றுதான்.
ஆனால் இந்திய சோதிடம் தனித்துவமானது இதை வேதசோதிடம் என பலரும் கூறுவர் நாம் அதற்குள் செல்ல வேண்டாம். ஏனெனில கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்பது போல இது குழப்பமானது சோதிடத்தை வைத்து வேதங்கள் பெயரெடுத்தனவா அல்லது வேதத்தை வைத்து சோதிடம் பெயரெடுத்ததா என்பது விவாதத்திற்குட்பட்டது. ஆனால் நான் கூறுவேன் முட்டைதான் முதலில் வந்தது என இதைபற்றி இங்கு பேச வேண்டாம் பரிணாம வளர்ச்சி கொள்கையை புரிந்து கொண்டவர்களுக்கு இது விளங்கும். வேதசோதிடம் என்பது One of superlative word.
சரி விசயத்திற்கு வருவோம்.
இந்திய சோதிட முறை நட்சத்திர சோதிடம் என உலகோர்களால் அழைக்கபடுகிறது. உடனே நட்சத்திர பலன் என்று புரிந்து கொள்ள வேண்டாம் பலனறிதல் என்பது இதன் ஒரு பயன்பாடு மட்டுமே . இது காலம் பற்றிய கணிதம்.
அனைவருக்கும் மேசம் என்பது துவக்கபுள்ளி அதுவும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இந்திய சோதிடம் அசுவனியின் ஆரம்ப புள்ளியை வைத்து துவங்கி இந்த வான்மண்டலத்தை புரிந்து கொள்கிறது.
நட்சத்திர வழி புரிதலில் தந்த்ரா என்ற பிரிவு கூறும் கணிதங்கள். உலகின் முன்னோடிகளாக நம்மை தரமுயர்த்துகிறது. Trigonometry ஐ அறிமுகம் செய்ததும் இங்குதான். வான்கணித அளவீட்டு பொதுப்படுத்துதலில் 120° என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவேதான் 120• புள்ளிகளின் நட்சத்திர அதிபதிகள் அதே கிரகமாகவே இருக்கும். மேசம். சிம்மம். தனுசில ஒரே நட்சத்திர அதிபதிகளாகவே வரும்
இது இந்த நட்சத்திர சோதிடத்தின் அடிப்படை கட்டமைப்பு.
இந்த கட்டமைப்புதான் அடித்தளம் இந்த அடித்தளம் ஒன்பது அதிபதிகளைக் கொண்டே உருவாக்கபட்டுள்ளது அந்த ஒன்பது அதிபதிகளில் ராகு மற்றும் கேது அடங்கும்.
எனவே வின்முட்டும் இந்த சோதிட கோபுரத்தின் இடை செங்கலாக ராகு கேது இல்லை அதன் அஸ்திவாரத்திலேயே இவைகள் உள்ளன. இவை அப்போது வந்தது இப்போது வந்தது என்று எதையாவது பேசலாம் ஆனால் இவைகள் துவக்கத்தில் இருந்தே வந்தது.
ஆனால் மக்களுக்கு ராகு கேது என்பது என்ன என்று தெரியாமல் இருந்தபடியால் அதன் முக்கியத்துவம் பல்வேறு காலகட்டங்களில் கூடி குறைந்து இருக்கலாம். ஆம் இப்போதும் கூட பலருக்கு ராகு கேது என்றால் என்ன என்று தெரியாது. பல சோதிடர்களின் அதை செம்பாம்பு கரும்பாம்பு என்றுதான் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
மீண்டும் மற்றொரு தலைப்பில் பேசலாம்.
கா பா ஜோதிட எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர். ஜோதிடர். சுய முன்னேற்ற பேச்சாளர்.