
உங்கள் ஜாதகத்தில்.
அனைவருக்கும் வெற்றி மீது ஒரு அளவு கடந்த பேராசை இருக்கத்தான் செய்கிறது . நாம் வெற்றி என்று எதை முடிவு செய்து வைத்துள்ளோம் என்பது பெரிய விவாதத்திற்குட்பட்டது. இருப்பினும் நம்மில் பலர் புரிந்து வைத்து உள்ளதுபடியே பேசலாம்.
வெற்றி என்பது பொருளாதாரத்தை சார்ந்துள்ளது என்ற நமது முடிவுப்படியே பேசலாம். ஆனால் அதன் பெயர் வெற்றி இல்லை.
நமக்கு பொருளாதாரம் மீது அளப்பரிய காதல் காதல் என்பதை விட மோகம், போதை, அடிமைத்தனம் என வைத்துக் கொள்ளலாம்.
சரி யாரெல்லாம் செல்வத்தை அனுபவிக்க முடியும். அதற்கான செல்வம் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம். சோதிடப்படி நான் கூறும் விதிகளை பொருத்திப்பார்க்க சோதிட அறிவு தேவை என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் பதிவிடுவதே சாமான்ய மக்களுக்குத்தான். எனவே அனைவரும் உங்கள் குடும்ப ஜாதகங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நான் கூறும் அமைப்பு அதில் எந்த ஜாதகத்திலாவது உள்ளதா என பாருங்கள்.
சில எதிர்மறை சிந்தனைக்கு பிறந்தவர்கள் அதெப்படி நடக்கும் எனக்கெப்படி கிடைக்கும். என்று புலம்பலாம் நீங்கள் அதை கண்டு கொள்ளாதீர்கள். வாழைப்பழ சோம்பேறிகள் வாரமலரை படித்து விட்டு அதுதான் சோதிடம் என்று நினைத்துக் கொண்டு வந்து புலம்புவர்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முகநூலில் தனது ஜாதகத்தை மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளாக எல்லா குழுலையும் போட்டு பலன் கேட்டுக் கொண்டே உள்ள பல மனநோயாளிகளை பார்க்க முடிகிறது. அவர்களைப் பொறுத்தவரை அவர்களது வேதனை மிகுந்த வாழ்க்கையை கண்டு பிடிக்கும் சோதிடர்களுக்கு பரிட்சை வைப்பது மட்டுமே. அவர்கள் கேட்பதற்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்கின்ற கட்டாயமில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை . அதையும் கடந்து அவர்கள் முகநூலில் கண்ட இடங்களில் ஜாதகம் போட்டு பலன் கேட்பதை நான்கு வருடங்கள் செய்வதற்கு பதிலாக உருப்படியான வேலையை செய்திருந்தால் இந்நேரம் நல்ல நிலையில் இருந்திருக்கலாம். நீங்கள் கவனித்து உள்ளீர்களா என எனக்கு தெரியாது. ராஜநாடி நண்பர்கள் யாரும் ஜாதகம் போட்டு முகநூலில் பலன் கேட்டிருக்கவே மாட்டார்கள். ஏனா சோதிடருக்குனே ஒரு கெத்து இருக்கு. அது ராஜநாடி நண்பர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் ஏனா சுயநம்பிக்கை அப்படி
சரிங்க உங்க குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கங்க
உடனடியாக செல்வம் வரும் என்று யோசிக்க கூடாது ஏனா ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு பருவத்தில் கணி வரும் உங்களுக்கு காலம் வரும் போது உயர்வது நிச்சயம் என புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தில் குறிபிட்ட ஒருவருக்கு மட்டுமே இருந்தால் அவர் இருக்கும் வரை செல்வநிலை திருப்தியாக இருக்கும்.
சரி உங்கள் ஜாதகத்தில் சனி உள்ள வீட்டை ஒன்று என எண்ண துவங்கி பின் பக்கமாக எண்ணவும். அதாவது கடிகாரமுள் சுற்றுவதற்கு எதிர்புறமாக எண்ணிவர 1 ,5,7,9 உள்ள கட்டத்தில். சுக்கிரன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தராக முடியும். ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் சனி வக்ரமாக இருந்தால் 25- 36 வயதிற்குள் கடினமாக உழைத்து பொருளை ஈட்டலாம்
அவ்வாறு சனிக்கு 1,5,7,9 ல் சுக்கிரன் இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் அவரை சுகபோகமாக வாழ வையுங்கள். செல்வம் வந்து விடும். இந்த நிலையில் சனி வக்ரமாக இருந்தால் 36 வயதிற்கு மேல் செல்வநிலை பெருகும்
கா பா.








