ராகு கேது என்றால் என்ன?
கொஞ்சம் டீடைலான பதிவு, குழப்பமான சொல்கள் முடிந்தவரை குறைத்துள்ளேன்,
கீழுள்ள படத்தில்
சூரியன், பூமி, சந்திரன் முறையே மஞ்சள், நீலம், வெளிர் நிறம்,
சிவப்பு கோடு சந்திர பாதை ( 5°சாய்ந்தது )
புள்ளி ( டாட்டேட்) கோடு சந்திர பாதை மட்டமாக இருந்தால் எப்படி என்பதற்கான கற்பனை கோடு,
பச்சை அம்புகுறி சுழலும் டைரக்சன்,
மஞ்சள் துவங்கு கோடு, மேசம்ன்னு கூட வைச்சுக்கலாம்,
நீல கோடு பூமியின் பாதை,
பச்சை கூம்பு முதல்புள்ளி,
சிவப்பு கூம்பு நகர்ந்து கொண்டுள்ள புள்ளி,
பூமி சூரியனை சுற்றி வர 365.24 நாள், அதற்குள்ளாக பூமியை சந்திரன் 12 முறை சுற்றிவிடுகிறது அது 12 முறை சுற்றி தன்னுடைய துவங்கு புள்ளியை 346 நாட்களிலேயே அடைந்து விடுகிறது, இது தெரிந்த விசயம்தான்,
நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது,
நமக்கும் சூரியனுக்கும் இடையே 12 முறையும், சூரியனனுக்கு நேர் எதிர் அதாவது பூமிக்கு பின்புறம் என்று 12 முறையும் வருகிறது,
அம்மாவாசை என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சந்திரனில் படும் வெளிச்சம் நாம் பார்க்கும் நிலாவின் பின்பக்கமாக இருப்பதால் நமக்கு சந்திரன் இருளாக தோன்றுவது,
பௌர்ணமி என்பது சூரியன் சந்திரனுக்கு இடையே பூமி நிற்பது, அப்போது சூரிய ஒளி படும் சந்திர பகுதியை நாம் முழுவதும் பூமியிலிருந்து பார்க்க முடியும் ,
இதில் முக்கியமான விஷயம்,
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனை சந்திரன் மறைக்க வேண்டும்,
சூரியன் ,பூமி ,சந்திரன் என்ற நிலையில் இருக்கும் போது சூரிய ஒளி சந்திரன் மேல் படுவதை பூமி தடுக்கும்,
இவ்வாறு நடப்பதே கிரகணம்,
ஆனால் வருடத்திற்கு 12அம்மாவாசை, 12 பௌர்ணமி வருகிறது, அப்போது எல்லாம் கிரகணம் நடக்குமா ? எனில் இல்லை ,
எப்படி இடையில் வந்தால் மறைக்க வேண்டும்தானே, பிறகு ஏன் மறைக்கவில்லை?
சந்திரனின் பாதை பூமியின் அச்சில் இருந்து சாய்ந்துள்ளது,
அப்படியெனில் ஒவ்வொரு முறையும் இந்த மூன்று கிரகங்களும் நேர் கோட்டில் வரும்போதும், நாம் நேர்கோடு என்று கூறுவது,
பூமியில் இருந்து பார்க்கும் போது பக்கவாட்டு சுழற்சியை மட்டுமே கூறுகிறோம், ஆனால் அந்த சூரியனும் சந்திரனும் ஒரே பக்கவாட்டு கோணத்தை அடைந்தாலும் ,மேல் கீழாக உள்ளது,
ஒரு வீட்டில் முதல் தளத்தில் ஒருவரும், இரண்டாம் தளத்தில் ஒருவரும் உள்ளது போல, அவர்கள் இருவரையும் நீங்கள் சுட்டி காட்ட ஒரே பக்கவாட்டு திசையைதான் காட்ட முடியும், கையை அந்த கட்டிடத்தை பார்த்து திருப்பி கூறினாலும், மேல்கீழாக இருப்பதால் ஒருவரை ஒருவர் மறைக்க இயலாது,
இது ஒன்று போல இருப்பதுமில்லை ,
சந்திர பாதை சாய்வு ஆடிஅசைந்து கொண்டே இருப்பதால், உதாரணம் தட்டு கீழே விழுந்து கடைசியில் நிற்கும் போது விளிப்புகளை தரையில் மாறிமாறி படுவது போல, தலையாட்டுவது போல, பறக்கும் தட்டு பக்கவாட்டில் அசைவதுபோல அசைந்து கொண்டே உள்ளது,
எனவே முதல் தளத்தில் உள்ள சூரியனை பார்க்கும் போது, சில முறை இரண்டாம் தளத்திற்கும், சில முறை தரைதளத்திற்கும், ஒரு குறிபிட்ட முறைகளில் மட்டுமே சூரியன் உள்ள தளத்திற்கு சந்திரன் வருகிறது, மற்ற முறைகள் அம்மாவாசை என்றாலும் சூரியனுடன் இனையும் போது மட்டுமே சூரிய கிரகணம்,
அதுபோலவே, எதிரெதில் கட்டிடத்தில் சந்திரன், சூரியன் இருப்பதாகவும் இடையே பூமி இருப்பதாகவும் கற்பனை செய்யவும், இது பௌர்ணமி, இருவரும் முதல் தளத்திற்கு வந்தால் சந்திர கிரகணம்,
சந்திரபாதை சூரிய நடுகோட்டு பரப்பில் இருந்து 5.1° சாய்ந்துள்ளது, பரப்பிற்கு கீழே பாதி பாதையும், மேல் பாதி பாதையும்,
மேல், கீழ் என பிரியும் இடத்தில் ஒரு புள்ளி இருக்கிறதே, அதந்த புள்ளியில் சந்திரன் பயனிக்கும் போது முதல் மாடி, கீழ் பகுதியில் பயனித்தால் தரைதளம், மேல் பகுதியில் பயனித்தால் இரண்டாம் தளம் என கொள்க,
பூமியும் பயனிக்கிறது, அதனுடனே சந்திர பாதையும் செல்கிறது, மேலும் சந்திரபாதையும்,
நடுவில் துளையிட்டு அதில் நூல்கட்டு தொங்க விடபட்ட தட்டுபோல் பக்கவாட்டில் ஏறி ஏறி இறங்கியும் கொண்டுள்ளதால், இந்த மேல், கீழ், நடு புள்ளியும், நிலைகளும் மாறி கொண்டே உள்ளது,
இப்போது சந்திரபாதை நடுநிலை அதாவது சந்திரன் முதல் தளத்தில் உள்ள இடம் பூமிக்கும் சூரியனுக்கும் சரியாக இடையில் வந்தால் அன்று சூரியன் சந்திரனால் மறைக்கபடும், இது சூரிய கிரகணம்,
அடுத்த மாதம் சந்திரன் இதே போன்று சரியாக இடையில் வந்தாலும் சந்திர பாதை மேலோ, கீழோ சென்று விட்டதெனில் அப்போது கிரகணம் நிகழாது,
மேலம் இந்த சந்திரபாதையின் பக்கவாட்டுத் தலையாட்டம் ஒரு குறிபிட்ட கணிதத்திற்குள் உள்ளது, மேலும் இந்த கணிதம் சந்திர சுழற்சியுடனும் ஒருங்கிணைந்தும் உள்ளது,
சந்திர பாதையில் ஒரு புள்ளி வைத்தால் அதன் பக்கவாட்டு அசைவில் மேல் சென்று கீழ்வந்து அந்த புள்ளி சூரியநடுகோடு பரப்பை மீண்டும் தொட 18.6 வருடம் ஆகிறது, அதே போல பூமி இந்த நடுபுள்ளி பூமிபாதையின் துவங்குபுள்ளி சந்திரன் என அனைத்தும் 18.6 வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து மீண்டும் தனது பயனத்தை துவங்குகிறது,
இந்த சந்திர பாதை சூரிய நடுகோட்டு பரப்பிற்கு சமமாக எந்த புள்ளி உள்ளதோ அதுவே ராகு எனவும் கேது எனவும் அழைக்கபடுகிறது,
துவக்கமும், முதல், இரண்டாம் வருடத்திற்கும் படமுள்ளது, 18.6 வருடம் கழித்து முதல் படத்தில் உள்ளது போல மீண்டும் வரும்,
இதில் பச்சை கூம்பு துவக்கத்தில் பரப்பில் இருத்த புள்ளி அது வருடாவருடம் தனது பாதையில் மேலேருவதை கவணிக்கவும்,
சிவப்பு கூம்பு தற்போதுள்ள பரப்பு மட்டபுள்ளி இது ராகு என கொள்ளவும், பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன், சந்திரன் ஒரு திசையில் செல்வது போல தோண்றினால், ராகு அதற்கு எதிர் திசையில் பயனிக்கும், ராகுவிற்கு நேரெதிர்கனு கேது, ஏனெனில் வருடத்திற்கு ஆறுமாதம் சந்திர பாதையின் எதிர்பக்கம் சூரியனை நோக்கி இருக்கும் அப்போதுள்ள கணு கேது,
இதுல சந்தேகமிருப்போர் கேட்கலாம்,








